இந்தக் குழம்பு, பிரசவித்த பெண்களுக்கு மிகவும் நல்லது. மழை நேரத்தில் ஏற்படும் ஜுரம், உடல் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். இந்த குழம்பு செய்ய நல்லெண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும.

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு,
மிளகு - 20,
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.

* கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து… புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு ஓரங்கயில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

SOURCE FILE: MALAI MALAR

Post a Comment

 
Top