எல்லாமே முடிந்தது என்று (முடிந்ததென்று)
என்னைப்பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர்
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்கு உரியதே
நீர் மட்டும் பெருகனும்
நீர் மட்டும் இயேசுவே

உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்று இருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்
குயவனே உந்தன் கரம்
மீண்டும் எனை வனைந்தது
விழுந்து போன இடங்களில்யெல்லாம்
என் தலையை உயர்த்தியதே...

Post a Comment

 
Top