தாயினும் மேலாய் என்மேல்
அன்பு வைத்தவர் நீரே
ஒரு தந்தையைப் போல
என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே

என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன்
உன் மேல் அன்பு வைத்தேன் -நான்
உமக்காக எதையும் செய்வேன்

கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
உம் கரம் பிடிப்பேன்
எனைக் காக்கும் கரமதை
நழுவவிடாமல் முத்தம் செய்வேன்

எந்தன் கால்கள் இடறும் போது
விழுந்திட மாட்டேன் - உம்
தோளின் மீது ஏறிக்கொண்டு
பயணம் செய்வேன்

Post a Comment

 
Top