என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா

எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன்

உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே

துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன்

Post a Comment

 
Top